உள்ளூர் செய்திகள்

மாணவி ஒருவருக்கு காதொலி கருவியினை கலெக்டர் ஆகாஷ் வழங்கியபோது எடுத்த படம்.


தென்காசியில் மாணவர்களுக்கு காதொலி உபகரணங்கள் - கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

Published On 2022-11-01 14:36 IST   |   Update On 2022-11-01 14:36:00 IST
  • 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
  • அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்துகொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று வரும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது ) முத்து மாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News