உள்ளூர் செய்திகள்
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டர் கைது
- புத்தாண்டு அன்று திடீரென மாணவி மாயமானார்.
- மாணவியின் பெற்றோர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
சென்னை:
திருமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். புத்தாண்டு அன்று திடீரென மாணவி மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
இதற் கிடையே மாணவி வீட்டுக்கு திரும்பி வந்ததால் மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது கராத்தே பயிற்சி அளிக்கும் மாஸ்டர் உதய கருணாநிதி என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக கடந்த ஒரு ஆண்டாக தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.