உள்ளூர் செய்திகள்

தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-07-06 10:16 GMT   |   Update On 2022-07-06 10:16 GMT
  • சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார்.

நீடாமங்கலம்:

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி காவல் சரகம் எஸ் புதூர், மேல அலங்கன் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் விஜய்(28). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபஸ்ரீ அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவிடைமருதூர் போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News