உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மாற்றுத்திறனாளிகள் விழா

Published On 2022-12-01 09:14 GMT   |   Update On 2022-12-01 09:14 GMT
  • தமிழ்நாடு உதவிக்கரங்கள் அமைப்பின் சார்பாக விழா ஊட்டி தனியார் அரங்கில் நடைபெற்றது.
  • அப்துல் கலாம் ஆதரவற்ற அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு உதவிக்கரங்கள் அமைப்பின் சார்பாக விழா ஊட்டி தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நீலகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் நிக்கோலஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உதவிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மாநில பொதுச் செயலாளர் தீபக்குமார் குப்தா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சர்வதேச உரிமை மாவட்ட தலைவர் ரஜினி நற்பணி மன்றம் மாவட்ட செயலாளர் குமார் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்‌. நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் மலர்விழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்குமார், மத்திய அரசின் நலத்திட்ட நீலகிரி மாவட்ட தலைவர் தேவகுமாரன், செவித்திறன் குறைபாடுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பீவா மற்றும் விடுதி காப்பாளர் ஆசிரியர் மணிகண்டன், அப்துல் கலாம் ஆதரவற்ற அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

Tags:    

Similar News