உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-14 09:28 GMT   |   Update On 2023-10-14 09:28 GMT
  • கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை.
  • 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு வழங்க வேண்டும்.

பாபநாசம்:

பாபநாசம் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பொறுப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை, 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு தொகையாக 5 தவீதம் கூடுதலாக சேர்த்துழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர் அன்புமணி, செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், மனோகரன் , வினோத், ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News