உள்ளூர் செய்திகள்

பயிலரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டு பயிலரங்கம்

Published On 2022-10-14 09:19 GMT   |   Update On 2022-10-14 09:19 GMT
  • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் சார்பில் முதலாமாண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டு பயிலரங்கம் நடைபெற்றது
  • தமிழ்த்துறைத் தலைவர் மாணவர்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதை விளக்கி கூறினார்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் சார்பில் முதலாமாண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவரும், முன்னாள் திட்ட அதிகாரியுமான பேராசிரியர் கு.கதிரேசன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மாணவர்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதை விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அதிகாரி அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார். மாணவர் சுபாஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News