உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே போதைப் பொருட்களை விற்ற மளிகை கடைக்காரர் கைது

Published On 2023-09-03 12:35 IST   |   Update On 2023-09-03 12:35:00 IST
  • மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது.
  • சேகரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கத்தில் குட்கா பொருள்கள் மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்துஅந்தக் கடையில் திடீரென சோதனை செய்த போலீசார் அங்கு பதுக்கி விற்பனை செய்த 20 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப், குட்கா,போதை பொருட்களை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சேகரை( வயது 55) கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News