உள்ளூர் செய்திகள்

கைதான பாலகிருஷ்ணனை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன் கைது

Published On 2022-07-27 08:32 GMT   |   Update On 2022-07-27 08:32 GMT
  • கள்ளக்குறிச்சி அருகே தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன் கைது செய்யப்பட்டார்.
  • தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தைசேர்ந்தவர் கலியன் மகன் பழனிவேல் (50). விவசாயி, இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிவேல் அவரது மனைவி சின்ன பொண்ணு, 2 வது மகன் பால கிருஷ்ணன் (27) ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் சாப்பிட்ட தட்டை கழுவி தண்ணீரை வெளியேஊற்றுவதில் தந்தை மகனுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன் தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் பி.காம். படித்து முடித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News