உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம்- கலெக்டர் தகவல்

Published On 2023-03-01 15:20 IST   |   Update On 2023-03-01 15:20:00 IST
  • அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
  • மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை தானியங்கி பொறியாளரின் செயல்முறை ஆணையின்படி கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ள பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்க்கு காப்புத்தொகையினை மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரது (நகரம்) தஞ்சாவூர் அரசு சேவை இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000 ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தஞ்சாவூர் (நகரம்) பெயரிலும் எடுக்க வேண்டும்.தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் (ஊரகம்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ5,000-க்கான காப்புத்தொகையினை தஞ்சாவூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (ஊரகம்) பெயரிலும்,

ஒரத்தநாடு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000/ ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ஓரத்தநாடு) பெயரிலும், தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில் உள்ள மாவட்டத்தொழில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000 ற்கான காப்புத்தொகையினை பொது மேலாளர் மாவட்டத் தொழில் மையம் தஞ்சாவூர் பெயரிலும், எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்கான காப்புத்தொகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தஞ்சாவூர்,பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000-க்கான காப்புத் தொகையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் பெயரிலும் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் விலைப்புள்ளியுடன் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். விலைப்புள்ளிகள் 3-ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வருகை புரிந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் தொடர்புடைய அலுலகங்க ளில் தொடர்புடைய அலு வலர்களால் திறக்கப்படும்.

உறையின் மீதுஎந்த வாக னத்திற்கான விலைப்புள்ளி என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏல அறிவிப்பு நாள் மற்றும் தேரத்தினை மாற்றி அமைத்திட மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News