உள்ளூர் செய்திகள்
- சாலையில் சென்று கொண்டிருந்த வேன் வெற்றிச்செல்வன் மீது மோதியது.
- அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி காரைநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது53). இவர் கருங்ண்ணி ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம் போல் பணி முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு வந்த அவர் அங்கிருந்து சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது நாகையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஓடாச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.