தாரமங்கலம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் மோதல்
- இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ராமிரெட்டிபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு தலைமைஆசிரிய ராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் 30 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சிலர் ஆசிரியருக்கு ஆதரவாக இதை தட்டிக்கேட்ட னர். இதனால் அவர்க ளுக்கிடையே மோதல் உண்டானது.
இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தாக்கப்பட்ட மாணவர்க ளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாண வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதனால் பள்ளியின் தலைமைஆசிரியர் உமாராணி 2 தரப்பு மாண வர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவர்களிடம் எழுதி வாங்கியும், பெற்றோரிடம் மாணவர்களை கண்டிக்க வும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.