உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்

Published On 2023-09-13 07:13 GMT   |   Update On 2023-09-13 07:13 GMT
  • கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது.
  • அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம்:

மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திண்டிவனம் அருகே பாதிரி கிராமம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே வழியாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரகாசன்,காஞ்சிபுரம் மாவட்டம் இடையான்புதூர் பகுதியை சேர்ந்த கண்டக்டர் ஜெயசீலன் மற்றும் பயணிகள் 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கண்டெய்னர் லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News