உள்ளூர் செய்திகள்

வயல்வெளியில் பாய்ந்து அரசு பஸ் கவிழ்ந்தது

Published On 2024-12-12 13:18 IST   |   Update On 2024-12-12 13:18:00 IST
  • கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
  • ஒரு பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சாணாபுத்தூர் செல்லும் அரசு பஸ்(எண் டி62) இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வீரய்யன் ஓட்டினார். காலையில் மழை பெய்து கொண்டு இருந்ததால் 2 பயணிகள் மட்டும் பஸ்சில் இருந்தனர்.

பொன்னேரி அடுத்த காட்டாவூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.

இதில் ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. டிரைவர், கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

Tags:    

Similar News