உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

Published On 2022-10-18 12:42 IST   |   Update On 2022-10-18 12:42:00 IST
  • காவல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்பக்கமாக மோதியது.
  • விபத்தில் வசந்தராஜும், ஜெய்பீம் தாசும் படுகாயம் அடைந்தனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பெரியகாவனத்தை சேர்ந்தவர் வசந்த ராஜ் (வயது 34). இவர் நண்பரான சின்னக்காவனம் பர்மா நகரை சேர்ந்த ஜெய் பீம் தாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மெதூரில் இருந்து பொன்னேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காவல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது (எண்90சி) கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்பக்கமாக மோதியது. இதில் வசந்தராஜும், ஜெய்பீம் தாசும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வசந்த ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News