உள்ளூர் செய்திகள்
வெற்றிபெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
கராத்தே போட்டியில் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்
- போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- 15 வெள்ளிப் பதக்கத்தையும், 12 வெண்கல பதக்கத்தையும் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
விளாத்திகுளம்:
பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கட்டா மட்டும் சண்டை பிரிவில் 14 தங்கப்பதக்கத்தையும், 15 வெள்ளிப் பதக்கத்தையும், 12 வெண்கல பதக்கத்தையும் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினரும், பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.