உள்ளூர் செய்திகள்
- சம்பவத்தன்று சுடலைமுத்து கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
- திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுடலைமுத்து (வயது63). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. மர்ம நபர்கள் ஆடு களை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடு கள் திருடிய மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.