உள்ளூர் செய்திகள்

சென்றாய பெருமாள் கோவில் சுவரை ஒட்டியிருந்த இறைச்சிக் கடை அகற்றம்

Published On 2023-01-25 15:29 IST   |   Update On 2023-01-25 15:29:00 IST
  • சேலம் செவ்வாய்ப்பேட்டை எழுத்துக்கார தெருவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் மதில் சுவர் அருகே இறைச்சிக் கடை செயல்பட்டு வந்தது.

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை எழுத்துக்கார தெருவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மதில் சுவர் அருகே இறைச்சிக் கடை செயல்பட்டு வந்தது.

இதனை அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம்ஸ்ரீ, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யாவிடம் மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

துணை கமிஷனர் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, அந்த இறைச்சி கடையை போலீசார் உடன் சென்று அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அடுத்து அந்த இறைச்சிக் கடை அகற்றப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆன்மிக பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ, துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News