உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சிவன்மலையில் கிரிவலம், கூட்டு பிரார்த்தனை

Published On 2022-06-15 15:33 IST   |   Update On 2022-06-15 15:33:00 IST
பல ஊா்களில் இருந்தும் வந்த பக்தா்கள் மலை அடிவாரத்தில் கூடி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றம் பூஜைகள் செய்தனா்.

ஊட்டி:

கூடலூரை அடுத்துள்ள நம்பாலகோட்டை சிவன்மலையில் பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவலம் மற்றும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

விழாவையொட்டி பல ஊா்களில் இருந்தும் வந்த பக்தா்கள் மலை அடிவாரத்தில் கூடி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றம் பூஜைகள் செய்தனா்.

தொடா்ந்து உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News