உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பிரசவத்தின்போது சிறுமியின் சிசு இறந்தது : பலாத்கார வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

Published On 2023-11-17 07:49 GMT   |   Update On 2023-11-17 07:49 GMT
  • சிறுமி பலாத்கார வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மேலும் தலைமறைவான வாலிபரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள கோப்பம்பட்டிைய சேர்ந்தவர் கணேசன் மகன் உதயராயன்(23). கூலித்தொழிலாளி. இவர் அதேபகுதிைய சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

பின்னர் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்றும் உல்லாசமாக இருந்தார். இந்த விபரம் அவரது நண்பர்களுக்கும் தெரிந்தது. பின்னர் தனது காதலியை நண்பர்கள் சிலருக்கும் விருந்தாக்கினார்.

இதில் சிறுமி கர்ப்பமானார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்ட போதுதான் தனக்கு நேர்ந்த ெகாடுமையை உணர்ந்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு நேர்ந்த கொடுைமயை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிகிச்சையில் சிறுமிக்கு பிறந்த குழந்தையும் இறந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உதய ராயன் மற்றும் அவரது நண்ப ரான கொல்ல பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திரவிய கோடீஸ்வரன்(29) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 3-வது நபராக செங்குளத்துப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் மணிமாறன்(23) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவரும் ஆட்டோ டிரை வராக உள்ளார்.

போலீசார் தேடி வரு வதை அறிந்து தலைமறை வாக இருந்த மணிமாறனை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News