உள்ளூர் செய்திகள்

சாலையில் கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள்.

செங்கோட்டை- குற்றாலம் சாலையில் கொட்டி கிடக்கும் குப்பைகள்: பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-04-17 09:21 GMT   |   Update On 2023-04-17 09:21 GMT
  • சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
  • முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை -குற்றாலம் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சிலுவைமுக்கு பகுதியானது வல்லம், பிரானூர் பார்டர், வாஞ்சிநகர், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலையை சுற்றுவட்டார மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது காற்றில் பறந்து சென்று விழுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியினர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைத்து அவ்வப்போது குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News