உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-09-09 05:30 GMT   |   Update On 2022-09-09 05:30 GMT
  • வடமதுரை பகுதியில போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்றவரை கைது செய்தனர்.
  • அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வடமதுரை:

வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கம்பிளியம்பட்டியை சேர்ந்த விவேக்குமார்(30) என்பவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Tags:    

Similar News