உள்ளூர் செய்திகள்

கட்சி பாகுபாடின்றி அனைத்து கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கப்படும்

Published On 2022-11-30 14:51 IST   |   Update On 2022-11-30 14:51:00 IST
  • குன்னூா் நகராட்சி தலைவா் ஷீலா கேத்ரின் தகவல்
  • மின் இணைப்புக்கான தடையில்லா சான்று வழங்க வேண்டும்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்மன்ற மாதாந்திர கூட்டம் தலைவா் ஷீலா கேத்ரின் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைலா் வாசிம் ராஜா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: குன்னூா் நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் 6 வாா்டுகளை அ.தி.மு.க.வும், 24 வாா்டுகளை தி.மு.க.வும் வென்றது. இதில் தமிழக அரசு சாா்பில் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க திட்ட அறிக்கை சமா்பிக்கும்போது, கட்சி பாகுபாடின்றி அனைத்து வாா்டு உறுப்பினா்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தலைவா், துணைத் தலைவா் தெரிவித்தனா்.

குன்னூா் நகர பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து நகராட்சி மூலமாக ஏலம்விடப்பட வேண்டும். 1 சென்ட், 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டியுள்ளவா்களுக்கு மின் இணைப்புக்கான தடையில்லா சான்று வழங்க வேண்டும்.

அனைத்து ஈடுகாடுகளின் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்பன உளப பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News