உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் ஒன்றிய யூனியன் தலைவர் தாமோதரன் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.

தியாகதுருகம் அருகே 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

Published On 2022-07-14 08:28 GMT   |   Update On 2022-07-14 08:28 GMT
  • தியாகதுருகம் அருகே 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
  • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் துணை தலைவர் நெடுஞ்செழியன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார்.யூனியன் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி தலா 5 ஆடுகள் வீதம் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். அப்போது மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய அவைத் தலைவர் சாமிதுரை, துணைத்தலைவர் ராமலிங்கம், துணை செயலாளர் கணேசன், கால்நடை உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் கூத்தக்குடி கிராமத்தில் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News