உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே 119 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- நிகழ்ச்சிக்கு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார்.
- இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 119 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலா புரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 119 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.
நிகழ்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள், பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.