உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி. 

மருதகுளம் அரசு பள்ளியில் 120 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-08-29 09:13 GMT   |   Update On 2023-08-29 09:13 GMT
  • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
  • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதன்பின் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை 120 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப் பாண்டி, நாங்குநேரி வடக்கு வட்டார தலைவர் அம்பு ரோஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், தோட் டாக்குடி ஊராட்சி மன்றம் மேரி ஜெபன்சி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜெயக்குமார், ஜாண்சன், காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ், ராஜ், முருகன், ராபர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News