உள்ளூர் செய்திகள்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்

Published On 2023-01-12 10:05 GMT   |   Update On 2023-01-12 10:05 GMT
  • வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
  • பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.

பல்லடம் :

புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு தைப்பூசவிழாவுக்கு பாதயாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்லடம் வழியாக பாத யாத்திரை செல்கின்றனர்.

இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பாத யாத்திரையாக பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே,போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் பக்தர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில்,போக்குவரத்து போலீசார் பழனி மலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்தினை தவிர்க்கும் பொருட்டு பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.

Tags:    

Similar News