உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிலக்கோட்டையில் ஆதரவற்றோருக்கு அன்னதானம்

Published On 2023-07-18 04:56 GMT   |   Update On 2023-07-18 04:56 GMT
  • தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனரும் கட்சித் தலைவருமான குமுளி ராஜ்குமார் பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் உத்திரபாண்டியன் தலைமையில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள திரவிய நகர் லில்லியன் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனரும் கட்சித் தலைவருமான குமுளி ராஜ்குமார் பாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் உத்திரபாண்டியன் தலைமையில் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஆக்னேஷ் சேவியர், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நாகரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News