உள்ளூர் செய்திகள்
பூச்சொரிதல் விழா நடந்தது.
நாகை தாய் மூகாம்பிகை கோவிலில் பூச்சொரிதல் விழா
- பூந்தட்டு ஏந்தி கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.
- அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது.
நாகை துறைமுக கடற்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தியவாறு தாய் மூகாம்பிகை கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சாமியை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வருகிற 7-ந்தேதி நாகப்பட்டினம் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.