சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
அட்சயலிங்கசாமி கோவிலில் பூச்சொரிதல் விழா
- வண்ண மலர்களை ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜலாம்பிகை உடனுறைஅட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பங்குனித்திருவிழா பூச்சொரிதல் விழா தொடங்கியது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை ஊர்வலமாக ஆலய உட்பிரகாரத்தை மேல தாளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பலிபீடம் மற்றும் உற்சவருக்கு மஞ்சள் பொடி பால் பன்னீர் இளநீர் தேன் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம்வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.