சேலத்தில் பூக்கள் விலை, விற்பனை அதிகரிப்பு
- பூக்கள் ரகங்களில் பல கணிசமாக விலை குறைந்துள்ளது.
- வியாபாரிகள் மகிழ்ச்சி
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்றும், இன்றும் முகூர்த்த தினங்கள் ஆகும். இதையடுத்து தேவை அதிகரித்து , சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.800, ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. முகூர்த்த தினத்தால் மல்லிகை பூ ஒரு கிலோ இன்று ரூ.1200- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேசமயம் மற்ற பூக்கள் ரகங்களில் பல கணிசமாக விலை குறைந்துள்ளது. தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1200, முல்லை - ரூ.1200, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.300, கலர் காக்கட்டான் - ரூ.300, மலை காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்பங்கி - ரூ.50, சாதா சம்பங்கி - ரூ.80, அரளி - ரூ.120, வெள்ளை அரளி - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.120, செவ்வரளி - ரூ.160, ஐ.செவ்வரளி - ரூ.160, நந்தியா வட்டம் - ரூ.120, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.