உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் நிதி உதவியை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கிய காட்சி.

சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு அ.தி.மு.க. சார்பில் நிதி உதவி- முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்

Published On 2023-08-16 09:24 GMT   |   Update On 2023-08-16 09:24 GMT
  • நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முருகராஜ், தமிழக அளவில் 3-வது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான முத்து லட்சுமியை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
  • நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முருகராஜ், தமிழக அளவில் 3-வது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான அவரது சகோதரி முத்து லட்சுமி மற்றும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜலெட்சுமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பையா பாண்டியன், சங்கரன் கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சங்கரன்கோ வில் நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர ஜெய லலிதா பேரவை செயலாளர் சவுந்தர், நவநீதகிருஷ்ணா புரம் கிளை செயலாளர் அய்யாசாமி, நிர்வாகிகள் பாபு கதிரேசன் சிவஞான ராஜா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News