உள்ளூர் செய்திகள்
- சில குழுக்களிடம் பணம் வாங்கி அதனை கட்ட முடியாமல் இருந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிபட்டி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன்.
இவரது மனைவி கமலம் ( வயது 64).
இவர் சில குழுக்களிடம் பணம் வாங்கி அதனை கட்ட முடியாமல் இருந்தார்.
இதனால் கமலம் மன வேதனையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென கமலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.