உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் தனியார் பள்ளி பெண் துப்புரவு தொழிலாளி சாவு

Published On 2023-09-02 07:24 GMT   |   Update On 2023-09-02 07:24 GMT
  • சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்
  • விஷப்பூச்சி இவரை கடித்தது. இதனால் அவர் வாயில் நுரைதள்ளி சாலையில் விழுந்தார்.

கடலூர்:

பண்ருட்டி விழமங்கலம் வ.வு.சி. நகரைச் சேர்ந்தவர் வள்ளி (வயது53). இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் துப்புரவு பணி வேலை செய்து வந்தார்.இந்நிலையில் இவர் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் விஷப்பூச்சி இவரை கடித்தது. இதனால் அவர் வாயில் நுரைதள்ளி சாலையில் விழுந்தார். சாலையில் மயங்கி கிடந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வள்ளியை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News