உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையத்தில் இளம்பெண் தற்கொலை மாமனார், மாமியார் கைது

Published On 2023-01-27 10:15 GMT   |   Update On 2023-01-27 10:15 GMT
  • பள்ளிபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளிபாளையம்:

நாமக்கல் பள்ளிபாளை யம் பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன்சாமி (வயது 32). திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் அபிராமிக்கும் (31) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த அபிராமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்து தலைமறைவான தீபாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News