உள்ளூர் செய்திகள்
விளைநிலங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் விவசாயிகள் அவதி
- ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித்திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
- கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் நேரடி சம்பா விதைப்பு நடைபெறுகிறது. தற்சமயம், சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித் திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை தின்று சேதப்படுத்துகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.