உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

Published On 2022-10-23 12:23 IST   |   Update On 2022-10-23 12:23:00 IST
  • 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
  • விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட–த்தில் அக்டோபர் 2022-ம் மாதத்திற்கான விவசாயி–கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 28-ந் தேதி (வெள்ளி–க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News