உள்ளூர் செய்திகள்

சாலையில் நெல் உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

சாலையில் நெல்லை கொட்டி உலர வைக்கும் விவசாயிகள்

Published On 2022-10-07 07:24 GMT   |   Update On 2022-10-07 07:24 GMT
  • அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர்கள வசதியோ இல்லை.
  • நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் தான் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை கிராமத்தில் 1600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர் களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் ஈரப்ப தம் உள்ள நெல்லை அரசு கொள்முதல்நிலையம் அருகே உள்ள கிராம சாலையில் கொட்டிவைத்து தினசரி உலர்த்தி வருகி ன்றனர்.

கிராமசாலையில்நெல் உலர்த்துவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயி கள் கூறும்போது, ராராமு த்திரகோட்டை பகுதியில் 1500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன.

இங்கு விளையகூடிய நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் நெல்லை காயவைக்க போதுமான இடவசதி இல்லை .

அதனால அறுவடை செய்த விவசாயிகள் கிராம சாலைகளில் கொட்டி நெல்லை காய வைக்க வேண்டி உள்ளது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News