உள்ளூர் செய்திகள்

லாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

காரைக்கால் நல்லம்பல் ஏரியில் மணல் எடுப்பதை கண்டித்து விவசாயிகள், கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-13 13:16 IST   |   Update On 2023-06-13 13:16:00 IST
  • ஏரியிலிருந்து அரசு விதிகளுக்குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
  • பேச்சுவார்த்தைக்கு வந்த எம்.எல்.ஏ- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியில், அரசு திட்டங்களான விழுப்புரம் நாகை நான்கு வழி சாலை, காரைக்கால்-பேரளம் அகல ெரயில்பாதை திட்டம், கேந்திரவித்யாலயா உள்ளிட்ட பணிகளுக்காக, ஏரியிலிருந்து அரசு விதி களுக் குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக, அரசு விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப் பட்டு வருவதாகவும், சில சமயம் மேற்கண்ட அரசுத் திட்டங்களை தவிர, தமிழகத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவ தாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்த அளவுக்கு அதிகமான மணல் கொள்ளையை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்த நிலையில், அளவுக்கு அதிக மான மணல் எடுப்பது நிறுத்தப்படவில்லை.

தற்போது, குறுவை நடவு நடவுள்ள நிலையில், ஏரியில் மிக ஆழமாக மண் எடுப்பதால், நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தால், சம்பா நடவு கேள்விக் குறியாகும் என, ஏராளமான விவசாயிகள், கிராம மக்கள், ஏரியிலிருந்து மணல் ஏற்றிவந்த லாரி களை நேற்று சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், நல்லம்பல் ஏரிக்கு செல்லும் வழியை யும் இரும்புத் தடுப்புகளால் தடுத்தனர். மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விபரம் அறிந்த மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), தாசில்தார் பொய்யாத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத தால், தொகுதி எம்.எல்.ஏ சிவா சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ சிவா மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரி மகேஷ் (நீர்வளம்) ஆகி யோரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு மணல் கொள்ளையை தடுக்கா ததற்கு கண்டன கோஷம் எழுப்பியதோடு, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ சிவா பேசியதாவது:-

நல்லம்பல் ஏரியில் வயல் மட்டத்திலிருந்து அளவெ டுத்து முறைப்படி மணல் அள்ளப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப் பில்லை. மணல் அள்ளும் இடங்களில் ஆழம், அகலம், நீளத்தை அளந்து வரு கிறோம். மண்ணை அள்ளிய பிறகு பள்ளங்களை ஏரியின் மற்ற பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சமன் செய்வோம். என்றார். இதில் உடன்பாடு ஏற்ப டாததால், மக்கள் சிறை பிடித்த லாரிகளை விடு விக்க முடியாது என தொடர்ந்து போராடினர். இதனால் அங்கு அசம்பா விதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

Tags:    

Similar News