உள்ளூர் செய்திகள்

பாளை அருகே தோட்டத்தில் விவசாயி தற்கொலை

Published On 2023-11-27 09:11 GMT   |   Update On 2023-11-27 09:11 GMT
  • ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
  • மனமுடைந்த ஜெயபெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள முனைஞ்சிபட்டியை அடுத்த காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபெருமாள் (வயது 50). விவசாயி.

இவருக்கு குருவம் மாள்(45) என்ற மனைவியும், சுடலை மணி (18) என்ற மகனும், முத்தரசி (16) என்ற மகளும் உள்ளனர். ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை சரியாக பரா மரிக்காமலும் இருந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இதில் மனமுடைந்த ஜெயபெருமாள் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனிடையே இரவு வெகு நேரமாகியும் தந்தையை காணாததால் அவரது மகன் சுடலைமணி தோட்டத்திற்கு தேடிச்சென்றுள்ளார். அப்போது அருகில் விஷப்பாட்டிலுடன் ஜெயபெருமாள் மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியி லேயே ஜெய பெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News