உள்ளூர் செய்திகள்

விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-05-15 16:02 IST   |   Update On 2023-05-15 16:02:00 IST
  • விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது.
  • மனவேதனை அடைந்த மாரியப்பன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பென்டரஅள்ளி ஏ.மோட்டூரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது57).

விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

ஆனாலும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மாரியப்பன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News