உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
- பண்ருட்டியில் தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பூண்டி குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். சம்ப வத்தன்று தனக்கு சொந்த மான நிலத்தில் தீராத வயிற்று வலி காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.
மயங்கி கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர் மேல்சிகிச் சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது ெதாடர்பாக புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.