உள்ளூர் செய்திகள்

சிவா கணபதி.

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பண்ருட்டி தொழிலாளி பலி

Published On 2022-07-12 12:26 IST   |   Update On 2022-07-12 12:26:00 IST
  • கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பண்ருட்டி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் .

கடலூர்:

பண்ருட்டி அருகே சித்திரைசாவடியை சேர்ந்த வர் சிவா கணபதி (வயது32) கட்டிட தொழிலாளி இவர் திருமணம் ஆனவர் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர் இவர் புதுவை முத்தையால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் கட்டிட வேலைசெய்துவந்தார். சம்பவத்தன்று மாலை கட்டிடத்தின் 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் . அப்போது தவறி விழுந்தார் இதனால் படுகாயம்அடைந்த அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்குசிகிச்சை பலனளிக்காமல் சிவகணபதி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News