உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

Published On 2022-07-30 14:40 IST   |   Update On 2022-07-30 14:40:00 IST
  • பஸ் திருவாகவுண்டனூர் ரவுண்டானா அருகில் திரும்பும்போது படியில் நின்று இருந்த முதியவர் தவறி கீழே விழுந்தார்.
  • இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி:

கரூரில் இருந்து சேலத்துக்கு ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ் திருவாகவுண்டனூர் ரவுண்டானா அருகில் திரும்பும்போது படியில் நின்று இருந்த முதியவர் தவறி கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த முதியவர் மதுரை காந்திநகர் அருகே உள்ள தாசில்தார் நகர் காலேஜ் தெருவைச் சேர்ந்த சாகர் பாபு (வயது 69) என்பது தெரியவந்தது.இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News