உள்ளூர் செய்திகள்
கோவையில் வியாபாரியிடம் பணம் பறிப்பு
- 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர்.
- வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கோபி என்ற யூசுப் (வயது 33). வியாபாரி. சம்பவத்தன்று இவர் செந்தமிழ் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே பாக்கெட்டில் இருந்து ரூ.2,500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கோபி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.