உள்ளூர் செய்திகள்
கோவையில் பார் சப்ளையரிடம் பணம் பறிப்பு
- ராஜா புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர்.
கோவை:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று ராஜா வேலை செய்து கொண்டு இருந்த போது புலியகுளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 26) என்பவர் அங்கு வந்தார். அவர் பீர் பாட்டிலை உடைத்து ராஜாவின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.900 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார். இது குறித்து அவர் ராமநாதபுரம போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.