உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2023-02-01 10:09 GMT   |   Update On 2023-02-01 10:09 GMT
  • வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
  • இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம், கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (46). இவர், கரூர் மெய்ன்ரோட்டில் உள்ள சோலார்பகுதியில், பாஸ்ட் புட் கடை ஒன்றின் அருகே நேற்று நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு நபர் அவரிடம், வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து, உமா மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு லாட்டரி விற்பனை செய்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர் சோலார் புதூர், பாலுசாமி நகரைச் சேர்ந்த சண்முகராஜா ( 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News