பவானி பெண்ணை கொன்ற வாலிபர் சிறையில் அடைப்பு
- பவானி பெண்ணை கொன்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
- இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு அண்ணாமலை யார் வீதியைச் சேர்ந்தவர் சிவகார்த்தி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மேனகா (47). இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மேனகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ய ப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் மேனகாவை கொன்றது அவரது மகளின் காதலன் தினேஷ் பாலா (22) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, மேனகாவின் மகள் யூ-டியூப் எடிட்டரான தினேஷ் பாலாவை காத லித்து வந்துள்ளார்.
இரு வீட்டிலும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பா டுகளும் நடந்து வந்தது. இந்நிலையில் மேனகாவின் நடவடிக்கை சரியில்லா ததால் அவரது மகள் தாயை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று மேனகா வீட்டில் இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த தினேஷ் பாலா தனது வருங்கால மாமியா ரிடம் அவரது நடவடிக்கை குறித்து பேசி உள்ளார். அப்போது இருவர் இடை யே தகராறு ஏற்ப ட்டுள்ளது.
இதில் ஆத்திர மடைந்த மேனகா, தினேஷ் பாலாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தினேஷ் பாலா மேனகாவை கழு த்தை நெரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் தனது காதலியிடம் கூறியுள்ளார். அவரும் கொலையை மறை க்க காதலனுக்கு உதவி செய்துள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் பாலா மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட தினேஷ் பா லா கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.