உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

Published On 2023-08-08 09:48 GMT   |   Update On 2023-08-08 09:48 GMT
  • வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
  • போலீசார் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் ரோடு அம்மன் நகர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் காணவில்லை. இதை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த தனியார் நிறுவன உரிமை யாளர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் புஞ்சை புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகித் (வயது 20) என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ரோகித்தை கைது செய்து நீதிமன்ற கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ரோகித் மீது கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News