உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2022-12-17 07:08 GMT   |   Update On 2022-12-17 09:55 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
  • பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.

பவானி:

பவானி பழைய காவிரி ஆற்று பாலம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பிண்ணாக பதில் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருவாமணி என்கிற மணிகண்டன் (24) என்பதும், பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்திற்காக கருவாமணி என்கிற மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News