உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
- பாபு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு. அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவியிடம் பாபு ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய ப்பட்டது. இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் பாபு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.